Housing · completed claimed
Indira Awas Yojana (IAY) houses
First announced in 2011-12 and named again in 5 later budgets, most recently 2016-17.
Allocated by budget year
See it on the map → All Housing projects →
What each budget said, year by year
2011-12
“During 2011-2012, we will take up 1,00,553 houses under IAY.”
“கிராமப்புறங்களிலுள்ள வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு, ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி அளவில், 1.80 இலட்சம் ரூபாய் மதிப்பில், சூரிய ஒளி மூலம் மின்வசதி பெறும் 60,000 பசுமை வீடுகளை 1,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த அரசு 2011-2012 ஆம் ஆண்டில் கட்டித்தரும். இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ், தற்போது கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும் உதவித் தொகையான 75,000 ரூபாய் ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும். இதில் மத்திய அரசின் மானியப் பங்கு ஒவ்வொரு வீட்டிற்கும் 33,750 ரூபாய் ஆகும். மாநில அரசின் மானியப் பங்கு தற்போதுள்ள 41,250 ரூபாய்க்கு பதிலாக 66,250 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 2011-2012 ஆம் ஆண்டில் 1,00,553 வீடுகள் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தில் கட்டித் தரப்படும்.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶106) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2011-12_speech_en_revised · p.63 · ¶106 · source PDF ↗ · full speech ↗ · on the map →
2012-13 Rs.666 crores
“In the coming financial year, 1,00,553 more IAY houses will be constructed for poor families and an amount of Rs.666 crores has been provided for this scheme in the Budget Estimates 2012-2013.”
“மாண்புமிகு முதலமைச்சரின் சூரிய ஒளி மின்சக்தி வசதிபெற்ற பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்தி, ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டங்களில் இந்த நாட்டிற்கே ஒரு நல்ல முன்னுதாரணத்தை இந்த அரசு உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2011-2012 ஆம் ஆண்டு தொடங்கி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், மூன்று லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு சூரிய ஒளி மின்சக்தி வசதியுடன் நல்ல இடவசதி உள்ள வீடுகள் கட்டி வழங்கப்படும் என ஏற்கெனவே அறிவித்திருந்தோம். இந்த ஆண்டு, தலா 1.80 லட்சம் செலவில், 1,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 60,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் நிதியாண்டிலும், 1,080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 60,000 வீடுகள் கட்டப்படும். இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கான ஒதுக்கீட்டுத் தொகையை ஒரு லட்சம் ரூபாய் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயர்த்தி வழங்கியதை மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். இத்திட்டத்தில் மாநில அரசின் பங்காக 66,250 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்களிப்பு 33,750 ரூபாய் மட்டுமே. இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 100,553 வீடுகள் இந்நிதியாண்டில் கட்டப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டிலும் இந்த திட்டத்தின் கீழ் 1,00,553 வீடுகள் ஏழை குடும்பங்களுக்கென கட்டித் தரப்படும். இதற்கென 2012-2013-ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் 666 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶98) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2012-13_speech_en · p.63 · ¶98 · source PDF ↗ · on the map →
2013-14
“Under the Indira Awas Yojana, one lakh houses will be taken up during 2013-2014.” financedept_2013-14_speech_en · p.47 · ¶112 · source PDF ↗ · on the map →
2014-15 Rs.729.69 crore
“Apart from this, 1.06 lakh houses will be taken up under the Indira Awaas Yojana during 2014-2015, for which Rs.729.69 crore has been provided in the Budget Estimates as the State's share and additional roofing cost.”
“மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டம் இந்த அரசின் பாராட்டத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும். இத்திட்டம் வீட்டுவசதி வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, பசுமை எரிசக்தியை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 1.8 இலட்சம் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டில், 60,000 வீடுகளை அமைத்திட, 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 1260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, இந்திரா வீட்டுவசதித் திட்டத்தில், 2014-2015 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் வீடுகள் அமைக்கப்படும். இதற்கான மாநில அரசின் பங்கு மற்றும் கான்கிரீட் கூரைக்கான கூடுதல் செலவிற்காக, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 729.69 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶74) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2014-15_speech_en · p.37 · ¶74 · source PDF ↗ · on the map →
2015-16 Rs.656.10 crores
“For 2015-2016 also, an amount of Rs.656.10 crores has been provided for taking up houses under the Indira Awaas Yojana.”
“நமது அரசு செயல்படுத்தியுள்ள பாராட்டத்தக்க திட்டங்களுள் முதலமைச்சர் அவர்களின் சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டமும் ஒன்றாகும். பசுமை எரிசக்தி வசதியோடு கூடிய 60,000 வீடுகளை ஆண்டுதோறும் அமைத்து, கிராமப்புற ஏழைகளின் வீட்டுவசதித் தேவையை இத்திட்டம் நிறைவு செய்கிறது. இதுவரை 4,680 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 60,000 வீடுகளை அமைப்பதற்காக, 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 1260 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, 2014-2015 ஆம் ஆண்டில் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 53,429 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கான மாநில அரசின் பங்கு மற்றும் கான்கிரீட் கூரைக்கான கூடுதல் செலவிற்காக 36438 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 2015-2016 ஆம் ஆண்டிலும் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்காக 65610 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶68) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2015-16_speech_en · p.42 · ¶68 · source PDF ↗ · on the map →
2016-17 Rs.4,876 crores
“Further, since 2011-2012, under the Indira Awaas Yojana (IAY), 4,41,637 houses have also been taken up at a financial outlay of Rs.4,876 crores, out of which Rs.3,010 crores has been provided as the State’s share including roofing cost.”
“நமது நாட்டிலேயே முதல் முறையாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் கூடிய கிராமப்புற வீட்டு வசதியை வழங்கும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் “சூரியஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டம்” வடிவமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் 60,000 வீடுகள் வீதம், மொத்தம் மூன்று இலட்சம் வீடுகள் கட்டப்படும் என இந்த அரசு அறிவித்தது. இதைச் செயல்படுத்தும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 5,940 கோடி ரூபாய் செலவில் மூன்று இலட்சம் பசுமை வீடுகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர, 2011-2012 ஆம் ஆண்டிலிருந்து இந்திரா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 4,876 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,41637 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, கான்க்ரீட் கூரை அமைப்பதற்கான செலவு உள்ளிட்ட மாநில அரசின் பங்காக 3,010 கோடி ரூபாயை இந்த அரசு வழங்கியுள்ளது.”
தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி
(¶57) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி;
வருடிப் படித்த உரையிலிருந்து financedept_2016-17_speech_en_interim · p.38 · ¶57 · source PDF ↗ · on the map →
Linked projects
- Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural · successor of
Nearby in the same sector
- Solar-powered green houses for houseless poor · 10 years
- Tamil Nadu Housing Board residential units · 8 years
- Pradhan Mantri Awaas Yojana (PMAY) - Rural · 6 years
- Free house site pattas scheme · 5 years
- Slum Clearance Board tenements (new) · 3 years
- Durable houses for Sri Lankan Tamil refugees · 3 years