Education · announced once

Super Clean Super Campus Scheme

1 budget named it 1 year span 139 ₹ crore allocated TVK government

First announced in 2026-27 and not named in any budget since.

See it on the map → All Education projects →

What each budget said, year by year

2026-27 Rs.139 crore new project TVK · revised

“Taking this into consideration, the Government is set to implement the 'Super Clean Super Campus' Scheme. Under this scheme, daily cleaning activities, maintenance of drinking water facilities and toilets, and 24-hour security for school campuses will be ensured, delivering Super Safety, Super Students and Super Campuses under our Super CM's governance. This scheme will be implemented in 10,000 schools in the first phase, with an allocation of Rs.139 crore in the Revised Budget Estimates for 2026-27.”
“வருவாய்ச்‌ செலவினம்‌ வருவாய்ச்‌ செலவினம்‌ திருத்த வரவு-டசலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-2760 4,05,802 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இடைக்கால வரவு-டசலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-27ஐ விட 319 சதவிதம்‌ அதிகம்‌. வருவாய்ச்‌ செலவினம்‌ 2027-28ல்‌ 449,319 கோடி ரூபாயாகவும்‌, 2028-2960 497,860 கோடி ரூபாயாகவும்‌ கணிக்கப்பட்டுள்ளது. முக்கியக்‌ கூறுகள்‌ கீழே விவரிக்கப்படுகின்றன: ஊதியங்களுக்கான செலவினம்‌ என்பது ஒரு உறுதிடுசய்யப்பட்ட செலவினமாகும்‌. இது 2026-27 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு டுசலவுத்திட்ட மதிப்பீட்டில்‌ 94,378 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டிருந்த நிலையில்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-276 91032 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும்‌ புதிய பணியமர்த்தல்களின்‌ அடிப்படையில்‌, ஊதியங்களுக்கான டசலவினம்‌ 2027-280 101046 கோடி ரூபாயாகவும்‌, 2028-29ல்‌ 112,161கோடி ரூபாயாகவும்‌ கணிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம்‌ மற்றும்‌ ஓய்வுக்கால நலன்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செலவினம்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-27ல்‌ 41846 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஓய்வுப்‌ பெறுபவர்களின்‌ எண்ணிக்கை போக்குகளைக்‌ கருத்தில்‌ கொண்டு இச்செலவினம்‌ 2027-28ல்‌ 46,030 கோடி ரூபாயாகவும்‌, 2028-29ல்‌ 50,633 கோடி ரூபாயாகவும்‌ கணிக்கப்பட்டுள்ளது. ஊதியம்‌ அல்லாத செயல்பாடுகள்‌ மற்றும்‌ பராமரிப்புகள்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-27ல்‌ 19,698 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இச்செலவினம்‌ 2027-28ல்‌ 21274 கோடி ரூபாயாகவும்‌, 2028-29ல்‌ 22,976 கோடி ரூபாயாகவும்‌ கணிக்கப்பட்டுள்ளது. இது 8 சதவித வளர்ச்சியைப்‌ பிரதிபலிக்கிறது. மானியங்கள்‌ மற்றும்‌ நிதி மாற்றங்களுக்கான செலவினம்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-27ல்‌ 111. 174494 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச்‌ செலவினம்‌ 2027-28ல்‌ 191219 கோடி ரூபாயாகவும்‌, 2028-2960 209780 கோடி ரூபாயாகவும்‌ கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில்‌ திரட்டப்பட்ட பொதுக்‌ கடனுக்கான வட்டி செலுத்துதல்கள்‌ அரசின்‌ உறுதிசெய்யப்பட்ட பொறுப்பாகும்‌. இது ஆண்டுதோறும்‌ அதிகரித்து வருகிறது. வட்டி செலுத்துதல்களுக்கான செலவினம்‌ திருத்த வரவு- செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-276 78,683 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச்‌ செலவினம்‌ 2027-28ல்‌ 89,698 கோடி ரூபாயாகவும்‌, 2028-29ல்‌ 102,256 கோடி ரூபாயாகவும்‌ மேலும்‌ உயரும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. மூதைனக்‌ கணக்கு திருத்த வரவு-செலவுத்‌ திட்டம்‌ 2026-27ல்‌ மூதைனச்‌ செலவினம்‌ 56,985 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய அரசு மூதைனச்‌ செலவினத்திற்கு அதிகம்‌ செலவிடும்‌ என எதிர்பார்க்கப்படுவதால்‌, இது 2027-28ல்‌ 68,382 கோடி ரூபாயாகவும்‌, 2028-29ல்‌ 83,426 கோடி ரூபாயாகவும்‌ கணிக்கப்பட்டுள்ளது. இது நிதி ஒழுக்கத்தைப்‌ பேணி, வளர்ச்சி சார்ந்த செலவினங்களை மேம்படுத்துவதில்‌ மாநில அரசின்‌ உறுதிப்பாட்டைக்‌ காட்டுகிறது. நிகர கடன்கள்‌ மற்றும்‌ முன்பணங்கள்‌ திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடு 2026-27ல்‌ 9,075 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளன. இவை 2027-28ல்‌ 10,891கோடி ரூபாயாகவும்‌, 2028-29ல்‌ 13,287 கோடி ரூபாயாகவும்‌ அதிகரிக்கும்‌ எனக்‌ கணிக்கப்பட்டுள்ளது. IV. வருவாய்‌ பற்றாக்குறை மற்றும்‌ நிதிப்‌ பற்றாக்குறை வருவாய்‌ பற்றாக்குறை திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-2760 55775 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேம்பட்ட வரி நிர்வாகம்‌ மற்றும்‌ வசூல்‌ திறன்‌ உள்ளிட்ட வருவாய்‌ பெருக்க நடவடிக்கைகளின்‌ விளைவாக, இது 2027-28ல்‌ 53,933 கோடி ரூபாயாகவும்‌, 2028-29ல்‌ 51058 கோடி ரூபாயாகவும்‌ குறையும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது: இதன்மூலம்‌ மாநிலத்தில்‌ மூதைனச்‌ செலவினத்திற்குக்‌ கூடுதல்‌ இடம்‌ உருவாகும்‌. திருத்த வரவு-செலவுத்‌ திட்ட மதிப்பீடுகள்‌ 2026-27ல்‌ மாநிலத்தின்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்‌ பற்றாக்குறையின்‌ விகிதம்‌ 3.00 சதவிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. வருங்காலத்தில்‌, மாநிலத்தின்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்‌ நிதிப்‌ பற்றாக்குறையின்‌ விகிதம்‌ 2027-28ல்‌ 2.87 சதவிதமாகக்‌ கணிக்கப்பட்டுள்ளது. 2028-29ல்‌, இது 2.80 சதவிதமாகக்‌ மேலும்‌ குறைந்து தமிழ்நாடு நிதிப்‌ பொறுப்புச்‌ சட்டம்‌ 2003-ல்‌ நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்குள்‌ இருக்கும்‌. V. பொதுக்‌ கடன்‌ மற்றும்‌ பொறுப்புகள்‌ கடன்களைப்‌ பெறுதல்‌ மற்றும்‌ திருப்பிச்‌ செலுத்துதல்‌ தொடர்பான மதிப்பீடுகள்‌, இந்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்த கடன்‌ வரம்பின்‌ அடிப்படையில்‌ இறுதிசெய்யப்பட்டுள்ளன. பொதுக்கடன்‌௧களை பொறுத்தமட்டில்‌ இவ்வரசு 2026-270, மொத்தம்‌ 173,445 கோடி ரூபாய்‌ கடன்‌ பெறவும்‌, 51971 கோடி ரூபாய்‌ திருப்பிச்‌ செலுத்தவும்‌ திட்டமிட்டுள்ளது. பொது கணக்கின்‌ கீழுள்ள பொறுப்புகளும்‌ பொதுக்‌ கடனுடன்‌ சேர்த்துக்‌ கணக்கிடப்படுகின்றன. 2026-27 ஆம்‌ ஆண்டிற்கான இடைக்கால வரவு-சலவு திட்டத்தில்‌ மதிப்பிடப்பட்டிருந்த நிகர பொதுக்கடன்‌ மற்றும்‌ பொது கணக்கு பொறுப்புகள்‌ 121653 கோடி ரூபாய்‌, 2026-27 ஆம்‌ ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில்‌ 120,964 கோடி ரூபாயாக உள்ளது. இதன்‌ விளைவாக, 31 மார்ச்‌ 2027ஆம்‌ நாளில்‌ நிலுவைப்‌ பொறுப்புகள்‌ 10,98,768 கோடி ரூபாயாக இருக்கும்‌. இது 2026-27ல்‌ மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்‌ ஒட்டுமொத்த நிலுவை டபாறுப்புகளின்‌ விகிதம்‌ 27.01 சதவிதமாகும்‌. எனினும்‌, இந்தத்‌ தொகையில்‌ சென்னை மெட்ரோ ரயில்‌ இரண்டாம்‌ கட்டத்‌ திட்டப்பணிகளுக்காக பெறப்பட்ட 9,523 கோடி ரூபாயும்‌ அடங்கும்‌. இது மத்தியப்‌ பிரிவுத்‌ திட்டமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும்‌ நிலையில்‌ ஒன்றிய அரசின்‌ கணக்குகளில்‌ தேவையான புத்தகச்‌ சரிகட்டல்கள்‌ மேற்கொள்ளப்படும்போது, பொதுக்‌ கடன்‌ 9,523 கோடி ரூபாய்‌ குறையும்‌. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்‌ ஒட்டுமொத்த நிலுவை டபொறுப்புகளின்‌ விகிதமானது 2027-28ல்‌ 26.57 சதவிதமாகவும்‌, 2028-29ல்‌ 2610 சதவிதமாகவும்‌, மேலும்‌ குறையும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம்‌, தனது நிதி ஒருங்கிணைப்பு வழித்திட்டத்தின்‌ ஒரு பகுதியாக மாநிலம்‌ கடன்‌ நிலைத்தன்மையைப்‌ பேண இலக்கு கொண்டுள்ளது. VL கடன்‌ உத்திரவாதங்கள்‌ ஒவ்டுவாரு ஆண்டிலும்‌ நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 100 சதவீத அளவு அல்லது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில்‌ 10 சதவீத அளவு, இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 2026 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ திங்கள்‌ 31 ஆம்‌ தேதி அன்று உள்ளபடி, நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின்‌ அளவு, முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 63.57 சதவிதமாகவும்‌, மாநிலத்தின்‌ மொத்த உற்பத்தி மதிப்பீட்டில்‌ 5.04 சதவிதமாகவும்‌ உள்ளது. ஒவ்டுவாரு ஆண்டிலும்‌ மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ (Risk weighted) கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்கள்‌ முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்க்‌ கணக்கு வரவுகளில்‌ 75 சதவிதம்‌ அல்லது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில்‌ 7.5 சதவிதம்‌ இவற்றில்‌ எது குறைவானதோ அந்த அளவிற்குள்‌ அமையப்பெற வேண்டும்‌. 2026 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ திங்கள்‌ 31 ஆம்‌ தேதி அன்று உள்ளபடி, மீளப்பெறும்‌ சாத்தியக்‌ கூறுகளின்‌ அடிப்படையில்‌ கணக்கிடப்பட்ட நிலுவையிலுள்ள அரசு உத்திரவாதங்களின்‌ (Risk weighted guarantees) அளவு, முந்தைய ஆண்டின்‌ மொத்த வருவாய்‌ வரவுகளில்‌ 23.46 சதவிதமாகவும்‌ மாநிலத்தின்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில்‌ 186 சதவிதமாகவும்‌ உள்ளது. முடிவுரை முந்தைய அரசின்‌ நிர்வாகக்‌ குறைபாடுகளில்‌ ஏற்பட்ட கடன்‌ சுமையினால்‌ மாநிலத்தின்‌ நிதிநிலை தற்போது, நெருக்கடிகளை எதிர்கொள்ளும்‌ போதிலும்‌, இந்த இடைப்பட்ட கால நிதி நிலவரத்‌ திட்டம்‌ 4101) அடுத்த மூன்று ஆண்டுகளில்‌ நிதிச்‌ சமநிலையையும்‌ அமைப்பு ர்தியான வலிமையையும்‌ மீட்டெடுப்பதற்கான ஒரு தீர்க்கமான, எதிர்காலத்தை நோக்கிய பாதையை அமைக்கிறது. உயர்நிலை வருவாய்‌ மேம்பாட்டு குழு மற்றும்‌ டசலவின சீர்திருத்தக்‌ குழு ஆகியவற்றின்‌ வழிகாட்டுதலின்‌ கீழ்‌, வருவாய்‌ கசிவுகளை முறையாக அடைக்கவும்‌, செலவினங்களைச்‌ சீரமைக்கவும்‌, மக்கள்‌ நலச்‌ சேவைகளை மேம்படுத்தவும்‌ அரசு ஒரு சீரிய செயல்திட்டத்தை வகுத்து வருகிறது. முக்கியமாக, இந்த இடைப்பட்ட கால நிதி நிலவரத்‌ திட்டமானது, தற்போதைய நிநிலை மேம்பாட்டை மட்டும்‌ கருத்தில்‌ கொள்ளாமல்‌, அடுத்த 2 ஆண்டுகளில்‌ தூய்மையான, வெளிப்படையான, மேம்பட்ட ஆட்சியின்‌ மூலம்‌ வளர்ச்சியை எதிர்நோக்கி நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ வகுக்கப்பட்டுள்ளது. வருவாய்‌ ஆதாரங்களை திறம்பட பெருக்கி, விண்செலவுகளை குறைப்பதன்‌ மூலம்‌ பொதுக்‌ கடன்களை கட்டுக்குள்‌ கொண்டு வரும்‌. ஆழமான நிறுவன வலிமை, சிறப்பான தொழில்‌ சூழல்‌ மற்றும்‌ துடிப்பான மனிதவளத்தைக்‌ கொண்டுள்ள தமிழ்நாடு, இத்தகைய சீரமைப்பு நடவடிக்கைகளின்‌ மூலம்‌ நீடித்த பொருளாதார ஆரோக்கியத்தைப்‌ பெற்று, தொலைநோக்குப்‌ பார்வை கொண்ட, சீரான மற்றும்‌ உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத்‌ திகழும்‌. சல்ல்ல்லலலலல்‌” தமிழ்ப் பதிப்பின் அதே பத்தி (¶11) — வாக்கியம் அல்ல, முழுப் பத்தி; வருடிப் படித்த உரையிலிருந்து

financedept_2026-27_speech_en_revised · p.8 · ¶11 · full speech ↗ · on the map →

Nearby in the same sector